திண்டுக்கல் சீரக சம்பா மட்டன் பிரியாணி.., எப்படி செய்வது?

திண்டுக்கல் மட்டன் பிரியாணியின் தனித்துவமான சுவை சாப்பிட்டால் அப்படியே நாக்கிலே தங்கிவிடும். அந்தவகையில், பாரம்பரியமான முறையில் திண்டுக்கல் மட்டன் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Feb 19, 2025 - 10:38
 0  5

1. தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்
  • நெய்- 200ml
  • எண்ணெய்- 100ml
  • சீரகசம்பா அரிசி- 1kg
  • மட்டன்- 1 kg
  • பெரிய வெங்காயம்- 2
  • சின்ன வெங்காயம்- 200g
  • தக்காளி- 1
  • பூண்டு- 150g
  • இஞ்சி- 150g
  • மிளகாய் தூள்- 10g
  • பச்சை மிளகாய்- 4
  • புதினா- 1 கைப்பிடி
  • கொத்தமல்லி- 1 கைப்பிடி
  • பட்டை- 2 துண்டு
  • ஏலக்காய்- 7
  • கிராம்பு- 8
  • அன்னாசி பூ- 2
  • எலுமிச்சை- ½
  • தயிர்- 100ml

2. செய்முறை

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடானதும் மிளகாய் தூள் சேர்த்து கிளறி பச்சைமிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின் புதினா இலை, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் ஒன்றிண்டாக சேர்த்து அரைத்து சேர்த்து வதக்கவும்.

அடுத்து இதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதங்கியதும் இதில் தக்காளி மற்றும் தயிர் சேர்த்து வதக்கவும். 

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ சேர்த்து தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து சேர்த்து கிளறி உப்பு சேர்த்து பின் மட்டனை சேர்த்து கிளறவும்.

மட்டன் நன்கு வதங்கி வந்ததும் மட்டன் மூழ்கின்ற அளவிற்கு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 20 நிமிடம் நன்கு வேக வைக்கவும்.

சீரக சம்பா அரிசியை கழுவி 20 நிமிடம் நன்கு ஊறவைத்து எடுத்து ஒரு கப் அரிசிக்கு 1½ கப் தண்ணீர் அளந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

மட்டன் நன்கு வெந்ததும் எடுத்துவைத்துள்ள அளவு தண்ணீர் ஊற்றி கொதித்து வந்ததும் எலுமிச்சை சாறு, ஊறவைத்து அரிசி சேர்த்து வேகவைக்கவும்.

அரிசி முக்கால் பதம் வெந்து வந்ததும் மிதமான தீயில் வைத்து 20 நிமிடம் தம் போட்டு கிளறினால் சுவையான திண்டுக்கல் மட்டன் பிரியாணி தயார்.     

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.