கொல்லும் என்னவள்.!

காதல் கவிதை

Feb 28, 2025 - 15:42
 0  1
கொல்லும் என்னவள்.!

ஆயுதங்கள்
இல்லாமல் =என்னை
அறுத்து போடுகின்றாள்….

ஆசைகளை
சொல்லாமல் =என்னை
அன்பால் கொல்லுகின்றாள்….

இமைகளை
ஏவிவிட்டு =என்னை
இம்சைகள் பண்ணுகின்றாள்..

இதயத்தில்
நுழைந்துகொண்டு =என்னை
இல்லாமல் ஆக்குகின்றாள்…

கண்களின்
விழியமர்ந்து =என்னை
இன்பமாய் உறுத்துகின்றாள்..

காதலின்
மொழிகற்று =என்னை
பேசாமல் மூடுகின்றாள்…

இதழ்களின்
ரேகைகளால் =என்
வாழ்வினை எழுதுகின்றாள்…

மச்சத்தை
மூக்கில்பெற்று =என்
மறுஜென்மம் கேட்கின்றாள்…

உச்சத்தில்
ஏற்றிவிட்டு =என்னை
உயிருடன் புதைக்கின்றாள்….

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0