கொல்லும் என்னவள்.!
காதல் கவிதை

ஆயுதங்கள்
இல்லாமல் =என்னை
அறுத்து போடுகின்றாள்….
ஆசைகளை
சொல்லாமல் =என்னை
அன்பால் கொல்லுகின்றாள்….
இமைகளை
ஏவிவிட்டு =என்னை
இம்சைகள் பண்ணுகின்றாள்..
இதயத்தில்
நுழைந்துகொண்டு =என்னை
இல்லாமல் ஆக்குகின்றாள்…
கண்களின்
விழியமர்ந்து =என்னை
இன்பமாய் உறுத்துகின்றாள்..
காதலின்
மொழிகற்று =என்னை
பேசாமல் மூடுகின்றாள்…
இதழ்களின்
ரேகைகளால் =என்
வாழ்வினை எழுதுகின்றாள்…
மச்சத்தை
மூக்கில்பெற்று =என்
மறுஜென்மம் கேட்கின்றாள்…
உச்சத்தில்
ஏற்றிவிட்டு =என்னை
உயிருடன் புதைக்கின்றாள்….
What's Your Reaction?






