ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஆதார் இணைப்பைக் கட்டாயமாக்கி, நேரக்கட்டுப்பாடு விதித்துப் பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுக்களில் பலர் பாதிப்படைவதாக கூறி, அதனை ஒழுங்குபடுத்த, விளையாடுபவர்கள் ஆதார் இணைப்பைக் கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும், நேரக்கட்டுப்பாடு விதித்தும் தமிழக அரசு விதிமுறைகளை வகுத்து அறிவிப்பை வெளியிட்டது. மேலும் இந்த விதிமுறைகள் குறித்து கடந்த 2025 பிப்ரவரி 14-ம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த விதிகளை எதிர்த்து, ப்ளே கேம்ஸ் 24*7 பிரைவேட் லிமிடெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் ப்ளேயர்ஸ் நலச்சங்கம் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இன்று தீர்ப்பளிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.