TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA Registration 2025: விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் மற்றும் துணைத் தேர்வு எழுதும் மாணவர்கள் பயன் அடையும் வகையில் விண்ணப்பப் பதிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, ஆன்லைன் விண்ணப்ப பதிவு மீண்டும் மே 30ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின்கீழ் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன.
இவற்றில் சேர மே 7ஆம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு, மே 27ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த அவகாசத்தில் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் மற்றும் துணைத் தேர்வு எழுதும் மாணவர்கள் பயன் அடையும் வகையில் விண்ணப்பப் பதிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எனினும் கடைசித் தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
விண்ணப்பிப்பதுஎப்படி?
கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in, www.tngasa.org என்ற இணையதள முகவரிகளில் பெறலாம்.
குறிப்பாக, https://www.tngasa.in/user/register என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரரின் பெயர், கைப்பேசி எண், மின்னஞ்சல், பிறந்த தேதி, தகுதித் தேர்வு ஆகியவற்றின் விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு:
தொடர்பு எண்கள்: 044 - 24343106, 044 - 24342911
இ மெயில் முகவரி: tngasa2025@gmail.com
வகுப்புகள் தொடங்குவது எப்போது?
மாணவர் சேர்க்கைப் பணிகள் முடிவடைந்து முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு ஜூன் 30ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?






