அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகாரளிக்கப்பட்டது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்யச் சொன்னது.
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகையில், 29 சாட்சியங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதாரங்கள் இடம்பெற்றன. இதையடுத்து இந்த வழக்கில் கடந்த 28ஆம் தேதி தீர்ப்பளித்த மகளிர் நீதிமன்றம், ஞானசேகரன் குற்றவாளி என அறிவித்தது. மேலும் அவரின் தண்டனை விவரங்கள் ஜூன் 2 (இன்று) அறிவிக்கப்படும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி பின்வருமாறு கூறினார்.ஞானசேகரனுக்கு இரக்கம், கருணை காட்டக்கூடாது எனவும் அவர் மீது சாட்டப்பட்ட 11 குற்றங்களுக்கும் தடவியவில், ஆவணங்கள்,மேலும் அறிவியில் பூர்வமாகவும் சாட்சியங்கள் மூலமாகவும் மாண்புக்குரிய நீதிமன்றத்தில் நிறுவிக்கப்பட்டுள்ளது என கூறினார்.மேலும் பெண்கள் இது போன்ற பிரச்சனைகளை துணிச்சலுடன் எதிர்க்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.