ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்றுத்தந்த தமிழக வீரர்!
தென் கொரியாவில் இன்று தொடங்கிய ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சார்பாக முதல் பதக்கத்தை வென்றுத் தந்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த செர்வின் செபாஸ்டியன்.

தென் கொரியாவின் குமியில், 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் இன்று ஆரம்பமானது. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இத்தொடருக்காக 61 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 9 வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்திய அணியில் அவினாஷ் சாபிள், பிரவீன் சித்ரவேல், அன்னு ரானி போன்ற ஒலிம்பிக், ஆசிய பதக்கம் வென்றவர்கள், தேசிய சாம்பியன்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த தொடரின் முதல் போட்டியாக ஆடவருக்கான 20 மீட்டர் தடகள போட்டி நடைபெற்றது. இதில் தமிழக வீரர் செர்வின் செபாஸ்டியன் மற்றும் அமித் ஆகிய இரு இந்திய வீரர்கள் பங்கேற்றனர். அமித் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.
ஆசிய தடகள போட்டி: தங்கம் வென்று அசத்திய இந்திய வீரர் குல்வீர் சிங்
ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. பந்தய தூரத்தை 28:38.63 என்ற நேரத்தில் கடந்து தங்கப்பதக்கத்தை குல்வீர் சிங் வென்றார்.
முதல் நாளான இன்று ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் இந்திய வீரர் குல்வீர் சிங் கலந்து கொண்டார். கடைசி சுற்றுக்கு முந்தைய சுற்று வரை 4-வது இடத்தில் இருந்த குல்வீர், கடைசி சுற்றில் வேகத்தை அதிகப்படுத்தினார்.இதனால் இந்த ஓட்டப்பந்தயத்தில் குல்வீர் சிங் முதல் இடம் பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 28:38.63 என்ற நேரத்தில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
ஹரி சந்த் (1975) மற்றும் ஜி. லக்ஷ்மணன் (2017) ஆகியோருக்குப் பிறகு 10,000 மீட்டர் தங்கம் வென்ற மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை குல்வீர் 28:38.63 வினாடிகளில் கடந்து சென்றார்.
பாங்காக்கில் நடந்த கடந்த (2023) ஆசிய போட்டியில் இந்தியா 6 தங்கம், 12 வெள்ளி உள்பட 27 பதக்கங்கள் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






