ஒரு பென்சிலின் கதை | Story Of Pencil

இந்தியாவில் பிரபலமான இரண்டு பென்சில் பிராண்டுகள் நடராஜ் மற்றும் அப்சரா. சிலர் இவை இரண்டும் வெவ்வேறு நிறுவனம் என்று நினைக்கின்றனர், ஆனால் அது தவறு இது இரண்டும் இந்துஸ்தான் பென்சில் என்ற ஒரே நிறுவனமாகும்.

Mar 14, 2025 - 11:04
 0  2

1. ஹிந்துஸ்தான் பென்சில்:

ஹிந்துஸ்தான் பென்சில்:

இந்நிறுவனம் பென்சில் மட்டுமல்லாதுகூர்மையாக்கி (ஷார்ப்னர்),அழிப்பான்(இரேசர்), அளவுகோல் மற்றும் பேனா போன்ற பல பொருட்களை தயார்செய்கிறது.

இந்த நிறுவனம் வருடத்திற்கு 844 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. இது 45 சதவிகிதம் சந்தை வாடிக்கையாளரை வைத்துள்ளது.
ஹிந்துஸ்தான் நிறுவனம் தினந்தோறும் 8 மில்லியன் பென்சில்களை உற்பத்தி செய்கிறது.

இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பு, சுதந்திரத்திற்குப் பிறகும் கூட, வெளிநாடுகளில் இருந்து பென்சில்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதற்கு காரணம் வெளிநாடுகளின் தரத்திற்கு ஈடாக இந்தியாவில் பென்சில் தயாரிக்க முடியவில்லை.

சுதந்திரத்திற்குப் பிறகு அரசாங்கத்தின் உதவியால் இறக்குமதியை கட்டுப்படுத்தினர். இதனால் இந்திய நிறுவனம் மகிழ்ச்சி அடைந்தது. ஆனால் மக்களுக்கு உள்ளூர் நிறுவனத்தின் தரத்தில் மகிழ்ச்சியில்லை, காரணம் உள்ளூர் பென்சிலின் விலை வெளிநாட்டு பென்சிலின் விலையை விட அதிகமாக இருந்தது.

2. நட்ராஜ் பென்சில்:

நட்ராஜ் பென்சில்:

1958 ஆம் ஆண்டில் 3 நண்பர்கள் சேர்ந்து இந்துஸ்தான் பென்சில் என்ற நிறுவனத்தை தொடங்கினர். அவர்கள் சில ஜெர்மன் தொழிற்சாலைகளுக்குச் சென்று நல்ல தரமான பென்சில்களை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கற்றுக்கொண்டார்கள்.

அவர்களின் தயாரிப்புகள் மற்ற உள்ளூர் நிறுவனத்தை விட தரம் மிக உயர்ந்ததாக இருந்தது. அவர்கள் தயாரித்த பென்சிலிற்கு நட்ராஜ் என்ற பெயர் வைத்தனர்.
இந்நிறுவனம் மிக குறைந்த நாட்களிலே நட்ராஜ் பென்சில் பாதிக்கும் அதிகமான நுகர்வோர்களை கவர்ந்துவிட்டனர்.

இது பழைய விளம்பரத்தில் வருவது போல மற்ற எல்லா பென்சில்களையும் விட நட்ராஜ் பென்சில் நீண்ட காலம் நீடிக்கும் திறன் கொண்டதாக இருந்தது.

3. அப்சரா பென்சில்:

அப்சரா பென்சில்:

நடராஜ் ஒரு மலிவு விலையில் நீண்ட ஆயுளை வழங்கும் பிராண்டாக இருந்தது, ​​அப்பொழுது இந்நிறுவனம் 80 களில் அப்சரா என்ற புதிய பிராண்டை அறிமுகப்படுத்தியது.
நடராஜ் ஒரு மலிவு விலையில் நீண்ட ஆயுளை வழங்கும் பிரபலமான பிராண்டாக இருந்தபோது, ​​நிறுவனம் 80 களில் அப்சராவையும் அறிமுகப்படுத்தியது.
அப்சரா நட்ராஜ் பென்சிலில் இருந்து சற்று வேறுபட்டு அதிக விலையில் விற்கப்பட்டது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் சிறந்த மற்றும் தெளிவான கையெழுத்தை பெற முடியும் என்பதேயாகும்.
இந்த இரண்டு பிராண்டும் நிறுவனம் அனைத்து வெவ்வேறு பிரிவுகளையும் கைப்பற்ற உதவியது மற்றும் நாட்டின் மிகப்பெரிய பென்சில் உற்பத்தியாளராக மாறியது, அதன் உச்சத்தில் 60% சந்தை வாடிக்கையாளரை கொண்டுள்ளது.
2000 ஆண்டுகளில் இந்நிறுவனம் 50 நாடுகளுக்கு அதன் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யத்தொடங்கியது.

4. தயாரிப்புகள்:

இந்நிறுவனம் ஒவ்வொரு நாளும் 8 மில்லியன் பென்சில்கள், 1.5 மில்லியன் ஷார்ப்னர், 2.5 மில்லியன் அழிப்பான், 0.2 மில்லியன் அளவுகோல் மற்றும் 1 மில்லியன் பேனாக்களை உற்பத்தி செய்வதாக தெரிவிக்கிறது.
இந்துஸ்தான் பென்சில் நிறுவனம் பென்சில் தயாரிப்பில் முன்னோடியாக உள்ளது, இருந்தபோதிலும் அதன் சந்தை வாடிக்கையாளர் 45% ஆகக் குறைந்துள்ளது.

இந்துஸ்தான் பென்சில்கள் தொடர்ந்து சந்தைத் தலைவராக இருக்கின்றன, ஆனால் அதன் சந்தை வாடிக்கையாளர் 45% ஆகக் குறைந்துள்ளது. அதற்கு காரணம்,

கொயுகோ கேம்லின் & டோம்ஸ் போன்ற நிறுவனம் நட்ராஜ் மற்றும் அப்சராவிற்கு போட்டியாக வந்தது. புதிதாக வந்த டோம்ஸ் நிறுவனம் வேகமாக வளர்ந்து வருகிறது மற்றும் 30% சந்தை நுகர்வோர்களை கைப்பற்றியுள்ளது.

கேம்லின் மற்றும் டோம்ஸ் நிறுவனத்தின் நுழைவினால் ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் நிதி நிலை சற்று சரிவடைந்துள்ளது. இருந்தபோதிலும் உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக இந்த பென்சில் உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
குட்டி ஸ்டோரி நூல்களை தினந்தோறும் சுவை - நாளை உன்னைப் போற்றும் அவை.