தங்கம் விலையானது சர்வதேச பொருளாதார சூழலை பொறுத்து நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவிலோ மக்கள் தங்கத்தை முதலீடாக மட்டுமல்லாது ஒரு மங்களரமான உலோகமாக கருதுவதால் ஆண்டு முழுவதும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கத்தை வாங்குகின்றனர்.
தங்கம் என்பது உலகம் முழுவதும் முக்கிய முதலீட்டு பொருளாக இருப்பதால், இதன் ஏற்றம் இறக்கம் உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தங்கம் விலையானது 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலான நாட்கள் ஏறுமுகத்தில்தான் இருந்து வருகிறது. அந்த வகையில் தங்கம் விலையானது ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை சந்தித்து வருகிறது. சமீபத்தில் தங்கம் விலை 70,000ஐ கடந்தது.
இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் 840 ரூபாய் அதிகரித்து சவரன் ஒன்றின் விலை 71,360 ரூபாயாக அதிகரித்துள்ளது. கிராமுக்கு 105 ரூபாய் அதிகரித்து 8,920 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.