காதல் வர்ணிப்பு கவிதை - Love Impress Quotes in Tamil

Tamil-Propose-Kavithai,-Tamil-Impress-Quotes,-Impress-Kavithai-in-Tamil,-Tamil-WhatsApp-Love-Propose-Kavithai,-Tamil-First-Love-Kavithai

Oct 7, 2024 - 15:56
Oct 7, 2024 - 16:13
 0  8
காதல் வர்ணிப்பு கவிதை - Love Impress Quotes in Tamil

அடி என்னவளே!
வழி தெரியாமல்
தவிக்கிறேன் உன்
உயர கூந்தலில்
சிக்கிக்கொண்டு


இசைத்தட்டு சுழல்வது
போல சூழலும் இவள்
விழி சூழலில் மையம்
கொண்ட காதல் புயல் நீ!


உன்னை காணாமல் நான்
வருந்தி கவிதைகள் எழுதினேன்
ஆனால் கவிதைகளில் உள்ள
வார்த்தைகளோ உன் அழகு
காணாமல் வருந்துகிறது


நீர் இன்றி மீன் வாழ முடியாது
நீ இன்றி நான் வாழ முடியாது
வருவாயா இல்லை
என்னை வதைப்பாயா?


நேசத்துடன் உன் விரல்
தனில் என் விரல் கோர்த்து
மரணம் வரை நம்
உறவை தொடர ஆசையடி!


அவளும் நானும்
இணைந்தால் சிறு துளி
மழை கூட இருவருக்கும்
அடை மழை தான்


வசந்தகால தென்றலில்
உனைத் தேடியே அலை
பாய்கிறது மனம் நந்தவனத்து
வண்ணத்துப்பூச்சியாய்...


வாசலில் உன் கை பதித்த
கோலத்தை விட உன் கால்
பதித்த கோலம் அழகு
பின்னர் ஏன் கோலமிடுகிறாய்?
வாசலில் உன் கால்
தடங்கள் போதுமானது


அடுக்கடுக்காக கட்டி வைத்த
ஆசை மூட்டைகளை கொட்டி
தீர்க்க காத்திருக்கிறேன்
உன் கண் அசைவுக்காக


மைனாக்கள் கூட
உன்னிடம் கூடு கட்ட
கற்றுக்கொள்ள ஆசை
படுகிறதடி மங்கை நீ
கூந்தல் கட்டும்
அழகை பார்த்தபின்


கண்ணாக கருத்தாக உனை
காப்பேன் உயிராக உனை
கண்டேன் கலந்தேனே அட
உன்னுள் உறைந்தேனே இன்று
என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே


எல்லா இடத்திலும் தேடிப்பார்
என்னை விட உன்னை நேசிக்கும்
ஒருத்தரை உன்னால் ஒருபோதும்
கண்டு பிடிக்க முடியாது


வாசிப்பது நீயென்றால்
யோசிக்காமல் எழுதுவேன்
கண்களிலும் மை கொண்டு
பல கவிதைகளை


நிலவின் அழகை சொல்ல
வார்த்தைகள் கோடி
நீ எங்கு சென்றாலும் நான்
வருவேன் உன்னைத் தேடி


உன்ன பாக்கவச்ச விதிக்குக்கூட
தெரியாது உன்ன பாத்த
நொடியில இருந்து உன்மேல
கிறுக்கா அலையுவேன்னு


ரசித்து பார்ப்பது
நிலவை மட்டுமல்ல
உன் முகத்தையும்
தான் அன்பே!


உன் கண் சிமிட்டலில்
காணாமல் போன என்
இதயம் உன் சிரிப்பினால்
துடித்து கொண்டிருக்கிறது


உன் மீதான என் காதலை
வார்த்தையில் சொல்வதை விட
வாழ்ந்து காட்டுவதே சிறப்பு
ஆதலால் வா வாழ்த்து காட்டுவோம்!


நித்திரையிலும் நிம்மதியான
உறக்கம் உன்னோடு இருப்பதாக
நினைத்து தலையணியை
அணைக்கும் போது


என்ன வரம் பெற்றதோ
அந்நீர்த் துளிகள் உன் மீது
பட்டு உன் தேகத்தில்
முத்த ஊர்வலம் நடத்த


சிலந்தி வலையில்
சிக்கிய பூச்சியும்
செவ்வந்தி உன்
விழியில் சிக்கிய
நானும் ஒன்று தான்


அந்த பூமித்தாயும் உன்னை
பார்த்து பொறாமை படுவாள்
நீ வெட்கப்பட்டு அவளை
பார்த்து சிரிக்கும் போது


என் இதயத்தை தேடி
அலைகிறோன் இவளது
விழிகளைக் காண்கையில்
இதனை ஏனென்று அறிய
விரும்பவில்லை இவளின்றி
வாழ்ந்திடவும் இயலவில்லை


வெட்கத்தை மூடி மறைக்க
முடியாமல் உன் அணைப்புக்குள்
இடம் தேடி மொத்தமாய்
உன்னுள் கரைந்து போகிறேன்


உன் மீது இருக்கும் அன்பால்
என்னை அறியாமல் திரும்பி
பார்ப்பதும் விரும்பி கேட்பதும்
உன் பெயர் ஒலிக்கும் போதே


உனைக் காணும்
போதெல்லாம்
எனைத் தென்றல்
தீண்டுகிறது
உன் பார்வையோ
உன் சுவாசமோ
என நான் அறியேன்!


உன் அன்பின் தொடக்கம்
யாராக இருந்தாலும்
உன் அன்பின் முடிவு
ஆயுள் வரைக்கும்
என்னோடு இருந்தால்
மரணம் கூட சுகமே


யார் சொன்னாலும் பிடிக்காத
வார்த்தை தான் ஏனோ அவன்
சொல்கையிலே மீண்டும் மீண்டும்
கேட்டிட தோன்றுகிறது


நீ நிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை
இவைகளை எல்லாம்
அள்ளி சூடிக்கொள்ளும்
வானம் நீ!


மொத்தமாய் உன் அன்பு
என்னை ஆதிக்கம்
செய்ய சுத்தமாய்
மாறிப்போனேன் நானும்


உன் மீதான காதல்
என்பது நீ இருக்கும்
வரையல்ல நான்
இறக்கும் வரை


நீ கடல் கடந்து போனாலும்
கடல் தாண்டியும் வருவேனடி
உன்னைக் கவர்ந்து செல்ல


அரை நொடி வாழ்ந்தாலும்
போதுமடி உன் அரவணைப்பில்
நான் வாழ வேண்டும்
அடுத்த நொடியே மரணம்
வந்தாலும் சுகமாய் ஏற்பேன்


உலகில் உள்ள அனைத்து
பூக்களின் வாசங்களும்
சற்று குறைவு தான்
உன் கூந்தல் சூடி பின்
வாடிப்போன அந்தப்
பூக்களின் வாசத்தின் முன்


உன் மடியில் தலை சாய்ந்திருக்கும்
இந்த நொடி போதும் பெண்ணே
இந்நொடி என் உயிர் போனாலும்
சந்தோஷம் நாளை என்ற
கனவு களைந்து போகட்டும்


முடிவே இல்லாத காதலும்
பிரிவு இல்லாத வாழ்வும்
உன்னிடம் வேண்டும்
உன்னிடம் மட்டுமே வேண்டும்


வானில் நிலவைக்
காணவில்லையாம்
விண்மீன்கள் என்னிடம்
கூறின நான் எப்படிச்
சொல்வது வானத்து நிலவு
என்னுடன் இருப்பதை?


மழைச்சாரலாய் நீ வர
கவிச்சோலையானேன் நான்!


நீ தொட்டு சென்ற
வெட்கத்திலும் விட்டு
சென்ற மிச்சத்திலும்
சிக்கித் தவிக்கிறது
என் நாணம்


என்ன தவம் செய்ததோ
உன் தொடுதிரை
அலைபேசி நித்தமும்
உன் விரல்கள் தீண்டுவதற்கு


என்னை மறந்து கொஞ்ச
நேரம் உலகை ரசிக்க
நினைத்தால் அங்கும்
வந்துவிடுகிறாய் நானே
உன் உலகமென்று


என் காதில் நீ
உரைக்கும் காதல்
இரகசியம் என்னை
உறைந்து நிற்க
வைக்கும் மந்திரமடி


Thiruchitrambalam

நீ எவ்வளவு அழகென்பதை
உனது கண்ணாடிகள் சொல்லி
இருக்கும் இருந்தும் நான் எப்படி
இருக்கேன் என என்னோடு
நீ சரி பார்த்துக் கொள்ளும்
போது இன்னும் நீ அழகு


What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow